×

அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக்கொலை

சண்டிகர்: அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகதூர் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் நடத்திய துப்பக்கி சூட்டில் அவரது கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் உயிரிழந்தார்.

இந்த துப்பக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில், அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

The post அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Ariana ,Indian National Loktal Party ,L. A. Wuma Nafeh Singh ,CHANDIGARH ,ARYANA ,L. A. Wuma Nafe Singh ,Jaikishan ,Bahadur ,Indian National Lokthal Party ,L. A. Vumana Nafeh Singh ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்