×

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தொடர்ந்து 3-வது வாரமாக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஞாயிறன்று சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. பயணிகள் தேவைக்காக மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகளை நாளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை வைத்துள்ளது.

The post தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai coast ,Southern Railway ,Chennai ,Tambaram- ,Chennai beach ,Southern ,Railway ,
× RELATED சென்னை கடற்கரை –...