×

சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

ஆவடி: ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 35 வயதுக்கு பெண்ணுக்கு, 13 வயதில் மகள் உள்ளார். ஆச்சிறுமி அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகள் கடந்த 10ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 17ம் தேதி அவரது தாய் வேலைக்கு சென்ற பின் சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. சிறுமியின் தாயார் கடந்த 17ம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து ஆவடி போலீஸ் சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நிலையில் கடந்த 22ம் தேதி காணாமல் போன சிறுமி தானாகவே முன்வந்து ஆவடி காவல் நிலையத்திற்கு வந்தடைந்தார். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முரளி(23) என்ற வாலிபர், சம்பவம் நடந்த அன்று சிறுமி வீட்டில் இருந்த போது தாலி கட்டியதாகவும், பிறகு பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பெயரில் அதே பகுதியை சேர்ந்த முரளியை கைது செய்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Aavadi ,JP Estate ,Achirumi Government School ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...