- வெப்ப மின் நிலையம்
- நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை எண்ணூர் அனல் மின் நிலையம்
- தின மலர்
சென்னை: சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக 4,442 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ 2019ல் டெண்டர் கோரியது. பிஜிஆர் நிறுவனத்திற்கு 2022 மார்ச் மாதம் டெண்டர் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என கோரி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், பி.ஜி.ஆர். எனர்ஜி என்பது பினாமி நிறுவனம் அல்ல. பல திட்டங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி உள்ளது.
ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிஜிஆர் எனர்ஜிக்கு முந்தைய ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் புதுப்பித்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், டான்ஜெட்கோவுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்காக டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.