×

நாங்கள் பேனாவை விநியோகம் செய்கிறோம்; மக்களுக்கு வாளை விநியோகிக்க பாஜ முயற்சி: தேஜஸ்வி கடும் தாக்கு

சிவான்: பீகாரில் ஆர்ஜேடி தலைவரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான,தேஜஸ்வி மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். சிவான் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி,‘‘ இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்கு அவர்களின் கைகளில் பேனாக்கள் கொடுப்பதற்கு ஆர்ஜேடி விரும்புகிறது. ஆனால்,சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாஜ கட்சி மக்களுக்கு வாளை விநியோகிக்க முயற்சிக்கிறது. மதத்தை அதனுடைய இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற குடும்ப பின்னணியில் இருந்து நான் வந்துள்ளேன்.

என்னுடைய வீட்டில் உள்ள கோயிலில் தினந்தோறும் நான் சாமி கும்பிடுவது வழக்கமாகும். மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், எத்தனை முறை கோயில் சென்றாலும்,நதியில் புனித நீராடினாலும் அந்த பாவத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான எண்ணங்களோ, புதிய திட்டங்களோ நிதிஷிடம் இல்லை. மெகா கூட்டணி அரசு இருந்த போது, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை என்னுடைய வற்புறுத்தலினால்தான் நிதிஷ் ஏற்று கொண்டார்’’ என்றார்.

The post நாங்கள் பேனாவை விநியோகம் செய்கிறோம்; மக்களுக்கு வாளை விநியோகிக்க பாஜ முயற்சி: தேஜஸ்வி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tejaswi ,Sivan ,RJD ,Bihar ,Leader of ,Legislative Assembly ,Tejashwi ,Siwan district ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!