- குட்கா
- தர்மபுரி
- தர்மபுரி நகரம்
- உணவு பாதுகாப்பு அதிகாரி
- குமணன்
- டவுன் எஸ்.ஐ.க்கள்
- இளவரசன்
- செல்வபதி
- தர்மபுரி டவுன்
- வெண்ணம்பட்டி ரோடு, ஏ.கொல்ல அள்ளி
- தின மலர்
தர்மபுரி பிப். 22: தர்மபுரி நகர உணவு பாதுகாப்பு அதிகாரி குமணன் தலைமையில், டவுன் எஸ்ஐக்கள் பிரின்ஸ், செல்வபதி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், தர்மபுரி டவுன், வெண்ணாம்பட்டி ரோடு, ஏ.கொல்ல அள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையில் 3 கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடக்கும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
The post குட்கா விற்ற 3 கடைக்கு சீல் appeared first on Dinakaran.