×

ஓடும் ரயிலில் போதை ஆசாமி அட்டகாசம் பெண் பேச்சாளரிடம் ஆபாச செய்கை: வீடியோ வைரல்

கடலூர்: காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலில் பயணித்த பட்டிமன்ற பெண் பேச்சாளர் யோக தர்ஷினி என்பவருக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி ஒருவர், பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த யோக தர்ஷினி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.

அப்போது யோக தர்ஷினியின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அவரிடம் யோக தர்ஷினி நடந்த சம்பவம் குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து சாமிநாதன் மற்றும் சக பயணிகள் அந்த போதை ஆசாமியை பிடித்து நெய்வேலியில் உள்ள ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து சமூக வலைதங்களில் வீடியோவை பெண் பேச்சாளர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

The post ஓடும் ரயிலில் போதை ஆசாமி அட்டகாசம் பெண் பேச்சாளரிடம் ஆபாச செய்கை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karaikal ,Bangalore ,Mayiladuthurai ,Vadalur ,Cuddalore district ,Pattimanda ,Yoga Darshini ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை