×

பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

காரியாபட்டி: காரியாபட்டியில் தற்காலிகமாக இருக்கும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் கூரை செட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி பேரூராட்சி பஸ்நிலையத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை பெரியார் நிலையம் செல்லும் பேருந்துகள், திருச்சுழி மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் பாண்டியன் நகர் – திருச்சுழி விலக்கு ரோட்டிலிருந்து செல்கின்றன. விருதுநகர் செல்லும் பேருந்துகள் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்தப்படுகிறது. தற்போது கோடை வெயில் காலம் வந்துவிட்டதால் பகல் நேரங்களில் வெயில் கொளுத்துகிறது. இதனால் வௌியில் நிற்கும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களில் வெயில் தாக்காமல் இருக்க கூரை செட் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Kariyapatti Municipal Bus Stand ,Madurai Periyar station ,Thiruchuzhi ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...