- மேயர்
- காங்கிரஸ்
- யூனியன் அரசு
- கோயம்புத்தூர்
- PSNL
- கோவை மாவட்ட காங்கிரஸ்
- அகில இந்திய காங்கிரஸ் கட்சி
- தின மலர்
கோவை, பிப். 20: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் ஆபீஸ் முன்புறம் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார், எஸ்.எம்.எஸ். மாநில செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் இருகூர் சுப்பிரமணியம், தாமஸ் வர்க்கீஸ், கோவை போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசையும், ஒன்றிய அரசின் வருமான வரித்துறையையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் காந்தகுமார், குறிச்சி வசந்த், ஈஸ்வரமூர்த்தி, நந்தகோபால், ஜெரோம் ஜோசப், கோட்டை செல்லப்பா, ரங்கநாதன், கணேஷ், சச்சின் சிவகுமார், தங்கம் பழனிச்சாமி, முருகேஷ், மோகன்ராஜ், ஷேக் முகமது, சுரேந்தர் பாபு, நாகராஜ், ராமன், ஆர்.வி.எஸ்.சக்திவேல்,
எச்.எம்.எஸ்.மனோகரன், பழனிசாமி, தேவராஜ், டென்னிஸ் செல்வராஜ், அஸ்மத்துல்லா, என்.சி.சி.சுதன், என்ஜிஆர் செல்வம், சூர்யா, கிளின்டன், மதன், சஞ்சய், உமாமகேஸ்வரி, திலகவதி, பரிதா, மாலதி, முஸ்தபா, வக்கீல் பர்கத்துல்லா, மனோகர், பி.கே.நசீர், டாக்ஸி முருகன், ரவி, ஜமாலுதீன், சின்னப்பராஜ், பிரான்சிஸ், சாலமன், கனகராஜ், முருகவேல், மஸ்தான், மருதூர் செல்வராஜ், கடைவீதி முருகன், ரமேஷ், ஆரோக்கியதாஸ், முபாரக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து மாநகர் காங். ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.