- மக்கள் குறைப்பு நாள்
- திருவள்ளூர்
- மாவட்ட கலெக்டர்
- மக்கள் குறை நாள்
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
- டி. பிரபு சங்கர்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.29.73 லட்சம் வங்கி கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாகவும், உதவிகள் வேண்டியும் 491 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
இதில், நிலம் சம்பந்தமாக 119 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 87 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 73 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 96 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 116 மனுக்களும் என மொத்தம் 491 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 967 மதிப்பீட்டில் மானியத்துடன் வங்கிக் கடன் உதவிகளும், தாட்கோ சார்பில் விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளும், ஆக மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.29,73,467 வங்கி கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறப்பாக கொடி நாள் வசூல் புரிந்த மாவட்ட அலுவலர்களுக்கு சிறப்பு கேடயம் மாவட்ட கலெக்டர் வழங்கி கௌரவித்தார். இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வி.கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கடன்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.