×

கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் கைது

சோழிங்கநல்லூர்: ஓட்டேரி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் ஓட்டேரி செல்லப்பா தெரு அருகில் உள்ள பூங்காவில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை அழைத்து விசாரணை செய்ததில், அவரிடம் சிறுசிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் ஓட்டேரி பிரிக்ளின் ரோடு எஸ்எஸ் நகரைச் சேர்ந்த சுரேந்தர் (20) என்பதும், இரண்டாம் ஆண்டு பிபிஏ படித்து வருவதும் தெரிய வந்தது. இவர் கோயம்பேடு பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதனை ஓட்டேரி பகுதியில் விற்று வந்துள்ளார். இதையடுத்து சுரேந்தர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Otteri ,Otteri Chellappa Street ,Dinakaran ,
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...