×

20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை எஸ்ஐ ஆக பதவி உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் காவலர்களுக்கு 7 ஆண்டுகளில் தொடங்கி 20 ஆண்டுகளுக்குள் 3 பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசில் பெரிய துறையாக கருதப்படுவது வருவாய்த் துறை. வருவாய்த்துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் கடைநிலை பணியில் சேருபவர்கள் சராசரியாக 7 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வைப் பெற்று அதிகாரிகள் நிலையில் ஓய்வு பெறுகின்றனர்.

ஆனால், காவல்துறையில் மட்டும் இந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. காவலராக பணியில் சேருபவர் காவலராகவே பணி ஓய்வு பெறுவது கொடுமை. இது மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை எஸ்ஐ ஆக பதவி உயர்த்த அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,SI ,CHENNAI ,PAMC ,Tamilnadu ,Tamil Nadu government ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...