×

நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை

நாகர்கோவில்: நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவரது மகன் காசி (27). இவர் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் இன்ஜினியர் உட்பட ஏராளமான இளம் பெண்கள், மாணவிகளுடன் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்களும், 410 ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 141 பெண்கள் வரை காசியால் பாதிக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

காசி மீது கடந்த 2020ல் 7 வழக்குகளும், 2021 ல் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ல் காசிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.இதுவரை காசி மீது 4 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஒரு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையும் சேர்த்து மொத்தம் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இன்னும் காசி மீது 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது.

The post நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : Kashi ,Nagercoil ,Ganesapuram ,Chennai ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...