×

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமார் கைதான நிலையில் தற்போது மேலாளர் ஜெயபாலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போர்மேன், மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Virudhunagar ,Chathur ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து