×

கோவையில் பட்டப் பகலில் 12-ம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் வெட்டி கொலை

கோவை: கோவையில் பட்டப் பகலில் நேற்று 12-ம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்த சி.சி.டி.வி காட்சி வெளியானது. கோவை ஒண்டிப்புதூர் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவனை, கல்லூரி மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்த வந்த நிலையில் சூலூர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர் சரணடைந்தார். ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகி இருந்தது.

The post கோவையில் பட்டப் பகலில் 12-ம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ondiputhur road ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்