×

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது: கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

தாம்பரம்: தொடர் மழை காரணமாக தாம்பரம் அருகே முடிச்சூர், அமுதம் நகர், வரதராஜபுரம், பிடிசி குடியிருப்பு, அஷ்டலஷ்மி நகர், புவனேஸ்வரி நகர், தாம்பரம் கிருஷ்ணா நகர், சக்தி நகர், டிடிகே நகர், பாரதி நகர், கண்ணன் அவென்யூ, குட்வில் நகர்,செம்பாக்கம், திருமலை நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும், அங்குள்ள ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் சாலைகளில் ஆறாக ஓடிவருகிறது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செங்கலப்ட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர், தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது….

The post தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது: கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Mudichur ,Amutham Nagar ,Varadarajapuram ,PTC Residence ,Ashtalashmi Nagar ,Bhubaneswar ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...