×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவியாக ரூ.2 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடி, 30வது புத்தகக் கண்காட்சியை 2007 ஜனவரி 10ம் தேதி திறந்து வைத்து தலைவர் கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதிள ரூ.4 கோடியில் வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுவரை ரூ.5கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவியாக ரூ.2 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Artist Foundation ,M.G.Stalin ,CHENNAI ,DMK ,President ,M.K.Stalin ,Artist ,Karunanidhi ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...