×

குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டந்தாங்கல் கிராமத்தில், சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், புனித அந்தோனியர் குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது. இந்த, இல்லத்தில் தங்கியுள்ள 12 குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும், இல்லத்தில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் உணவின் தரத்தினையும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, குழந்தைகளிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவதன் நன்மைகள் குறித்தும், சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகள் உண்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், குழந்தைகளிடம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுபொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,St. Anthony's Children's Home ,Social Welfare Department ,Otthangal Village ,Wallajabad Union ,Kanchipuram District ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...