×

பாஜவையும், அதிமுகவையும் அவசியம் வீழ்த்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

 

மதுரை, பிப். 17: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டியது அவசிமானது என, மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் ஐந்தாண்டு செயல்பாடுகள் குறித்த நூல் வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று நடந்தது. இந்நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பெற்று கொண்டார். விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதைக்கேட்டாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது மோடியின் ஆட்சி. நாம் விரும்பும் ஆட்சி அமைந்திருந்தால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியிருக்க முடியும். தேர்தல் பத்திரம் வாயிலாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மோடி அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், நாங்கள் தேர்தல் பத்திரங்களால் பணம் வாங்கியதாக அவதூறு பரப்புகின்றனர். நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, 143 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, 19 மசோதாக்களை அவசரமாக பாஜ நிறைவேற்றியது. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.

பிரிந்திருப்பது போல் இருந்தாலும், பாஜவின் அடிப்படை கொள்கையிலிருந்து அதிமுக மாறவில்லை. மக்கள் விரோத பாஜ மற்றும் அவர்களுக்கு உறுதுணையான அதிமுகவை நாம் வீழ்த்த வேண்டும். அண்ணாமலை ஓடி ஓடி உழைத்தாலும், தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது. மோடியால் அவர் முகத்தை காட்டி, மக்களிடம் ஓட்டுக்கேட்க முடியாது. ராமரை காண்பித்து மட்டுமே ஓட்டு கேட்க முடியம். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், எம்பி சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் காமராஜ், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பாஜவையும், அதிமுகவையும் அவசியம் வீழ்த்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,K. Balakrishnan ,Madurai ,Marxist ,Communist ,State Secretary ,Su Venkatesan ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...