×

ஆடிட்டரிடம் ரூ.1.88 கோடி மோசடி குறும்பட நடிகரின் மனைவி கைது

திருச்சி: திருச்சி பால்பண்ணை விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஆடிட்டர் சீதா மனோகரன் (52). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் மாலதி (44). சீதா மனோகரனிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு தவணைகளில் ரூ.1. 88 கோடியை மாலதி வாங்கி உள்ளார்.

பின்னர் பணத்தை கொடுக்காமல் மாலதி ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சீதா மனோகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் மாலதியை நேற்று முன் தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாலதியின் உறவினர் 2 பேரை தேடி வருகின்றனர். மாலதியின் கணவர் மதியழகன் குறும்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆடிட்டரிடம் ரூ.1.88 கோடி மோசடி குறும்பட நடிகரின் மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Seetha Manokaran ,Trichy Dairy Viswas Nagar ,Malathi ,Dinakaran ,
× RELATED காரமடை காந்தி நகரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை