×

அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி மனு

மதுரை: திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ் பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்று கைதான, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் நீதிமன்றத்திலும், ஐகோர்ட் மதுரை கிளையிலும் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடியாகின. இந்தநிலையில் மீண்டும் ஜாமீன் கோரி அங்கித் திவாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 23க்கு தள்ளி வைத்தார்.

The post அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Madurai ,Madurai Enforcement ,Dindigul Government ,Dr. ,Suresh Babu ,Madurai Central Jail ,Dindigul court ,ICourt ,Dinakaran ,
× RELATED உத்தங்குடியில் உள்ள ஊரணியை சீரமைக்க...