×

சத்தி வனச்சாலையில் கரடிகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி


சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் கரடிகள் நடமாட்டத்தை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலையில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இன்று காலை ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 கரடிகள் தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் நடமாடின. கரடிகள் நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய கரடிகள் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. சாலையில் பகல் நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை மித வேகத்தில் இயக்குமாறும், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை உபயோகப்படுத்த கூடாது எனவும், வனவிலங்குகளை கண்டால் அருகில் சென்று புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post சத்தி வனச்சாலையில் கரடிகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : forest ,Satyamangalam ,Tigers ,Archive forest ,Tigers Archive ,Erode District ,Chati forest ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது