×

மனைவியை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடைச்சாணி கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகள் கணேசம்மாள் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணேசம்மாள் சமையல் வேலைக்கு சென்ற போது வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதுகுறித்து முருகன் பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் கணேசம்மாளை கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசம்மாள் பாப்பாக்குடி போலீசில் நிபந்தனையின் பேரில் கையெழுத்து போட்டு வந்தார். கடந்த 12.11.2017 அன்று கணேசம்மாள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு அடைச்சாணியில் தெருவில் நடந்து வந்த போது அவரை வழிமறித்த முருகன், அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

 

The post மனைவியை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Tenkasi court ,Murugan ,Adachani Keezath Street ,Pappakkudi Police Station, Tenkasi District ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...