×

மகள் மாயம்: தந்தை புகார்

பண்ருட்டி, பிப். 16: பண்ருட்டியை அடுத்த திருவாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் சந்தியா(27). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், எங்கும் கிடைக்காததால் சந்தியாவின் தந்தை கோவிந்தன் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

The post மகள் மாயம்: தந்தை புகார் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Panruti ,Tiruvamur ,Sandhya ,
× RELATED காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்