×

திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பார்வையாளர் ஒருவர் உயிரிழ்நதார். பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிங்கங்களை வளாகத்துக்குள் விடுவது வழக்கம். அப்போது, சிங்கம் இருந்த வளாகத்துக்குள் குதித்து செல்ஃபி எடுக்க முயன்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சிங்கம் தாக்கியபோது மரத்தில் ஏற தப்ப முயன்ற நிலையில் பார்வையாளர் உயிரிழந்தார். பார்வையாளர் உயிரிழந்ததை தொடர்ந்து பாதுகாப்பு கூண்டில் சிங்கம் அடைக்கப்பட்டது.

The post திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupathi Zoo ,Thirupathi ,Tirupati Zoo ,
× RELATED திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!!