×

கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கரூர்: கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பசுபதி பாண்டியனின் ஆதரவாளரும் ரவுடியுமான கருப்பத்தூர் கோபால் 2021 அக்.6-ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கில் ராஜா, சரவணன், சுந்தர், ரவி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pashupati Pandian ,Karur ,Karur District Principal Sessions Court ,Karupathur Gopal ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு