×

தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி வரவேற்பு..!!

டெல்லி: தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பாத்திரங்களை ரத்து செய்ததற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி வரவேற்பு அளித்துள்ளனர்.

தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு – கார்கே வரவேற்பு

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர திட்டத்தை துவங்கியபோதே அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி அரசின் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2019-ல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கருப்பு பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தை சட்டவிரோதம் என்று கூறி அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

தேர்தல் பத்திரம் ரத்து- சீதாராம் யெச்சூரி வரவேற்பு

தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு சீதாராம் யெச்சூரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,President ,Mallikarjuna Gharke ,Sitaram Yechuri ,Supreme Court ,Delhi ,Mallikarjuna Karke ,Dinakaran ,
× RELATED விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள்...