×

ரூ.22 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 4 பேர் கைது

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். மன்னார்வளைகுடா கடல் வழியாக படகில் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த நாட்டு புத்தளம் கடல் பகுதியில் நேற்று அதிகாலை இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ். தம்பபாணி கப்பலில் வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது புத்தளம் அருகில் சின்னப்பாடு கடல் பகுதியில் சென்ற இரண்டு படகுகளை நிறுத்தி சோதனை செய்தபோது படகின் அடிப்பகுதியில் 41 மூட்டைகள் பதுக்கிவைத்திருந்த 1,177 கிலோ பீடி இலைகள் மற்றும் 150 பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகையும் கைப்பற்றினர். இதன் மதிப்பு 22 லட்ச ரூபாய் என்று தெரிகிறது. இதுதொடர்பாக படகில் இருந்த புத்தளம் கல்பிட்டியைச் சேர்ந்த 20 முதல் 42 வயதுடைய நான்கு இலங்கையர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

The post ரூ.22 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameswaram ,Gulf of Mannar ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு