×

தக்கலை பகுதியில் பெண்களிடம் செயின் பறித்த வாலிபர் ஒரு வருடத்திற்கு பின் கைது

*12 பவுன் மீட்பு

தக்கலை : தக்கலை அருகே உள்ள நெல்லியார் கோணத்தை சேர்ந்தவர் ஜெகதிஷ் மனைவி அஜிதா (27). மார்த்தாண்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2022 டிசம்பர் 29ம் தேதி பாலப்பள்ளியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்தவர்கள், இவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக அஜிதா தக்கலை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய் மர்ம நபர்களை தேடி வந்தனர்.இதனிடையே அதே நாளில் பிரம்மபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் தனது மனைவி கலா (50) என்பவருடன் பைக்கில் கொல்லன்விளை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் கலா அணிந்திருந்த ஆறரை பவுன் செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக கலா தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதனிடையே தக்கலை போலீஸ் இன்ஸ்பெடக்டர் ராமச்சந்திரன் சாமியார் மடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் வடக்கேகரை பள்ளி முக்கை சேர்ந்த செய்யதலி (24) என்பது தெரிய வந்தது.

மேலும் செய்யதலி இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களில் தனது கூட்டாளி மாகீனுடன் ஈடுபட்டதும் ெதரியவந்தது. போலீசார் செய்யதலியிடம் இருந்து 12 பவுன் நகையை மீட்டனர். கூட்டாளியான மாகீன் கேரளாவில் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் செய்யதலியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post தக்கலை பகுதியில் பெண்களிடம் செயின் பறித்த வாலிபர் ஒரு வருடத்திற்கு பின் கைது appeared first on Dinakaran.

Tags : Takkala ,Thakalai ,Ajitha ,Nelliar Kona ,Marthandam ,Balapalli ,Takkalai ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!