×

ஐஎப்எஸ் அதிகாரி ரூ.9 கோடி நிலமோசடி

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வத்திராயிருப்பு ராமசாமியாபுரத்தை சேர்ந்த சின்னசாமி, ராஜபாளையத்தை சேர்ந்த சித்ரா, செட்டியார்பட்டியை சேர்ந்த குருசாமி ஆகியோர் நேற்று மனு அளித்தனர். அதில், ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா, அவரின் நண்பரும் குஜராத்தில் ஐஎப்எஸ் அதிகாரியாக பணியாற்றும் கருப்பசாமி ஆகியோர் சேர்ந்து, சின்னசாமிக்கு சொந்தமான ரூ.4.67 கோடி நிலத்தை ஏமாற்றி கருப்பசாமியின் மனைவி ஷகிலா பேகத்தின் தங்கை பிந்தியா, அவரது மகன் அஜீஸ் ரசூல் பெயரில் பதிவு செய்துவிட்டனர். அதேபோல் குருசாமிக்கு சொந்தமான நிலத்தை ரூ.5.50 கோடி ஏமாற்றி பதிவு செய்து பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post ஐஎப்எஸ் அதிகாரி ரூ.9 கோடி நிலமோசடி appeared first on Dinakaran.

Tags : IFS ,Virudhunagar ,Chinnaswamy ,Vathirairipu Ramasamiyapuram ,Chitra ,Rajapalayam ,Kuruswamy ,Chettiarpatti ,Virudhunagar district ,Raja ,Karuppasamy ,Gujarat ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...