×

சூளகிரியில் நுங்கு விற்பனைக்கு வந்தது

சூளகிரி, பிப்.14: சூளகிரியில், நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது.சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகிறது. மேலும், கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். இளநீர் மற்றும் கரும்பு சாறு, தர்பூசணி, வெள்ளரி நுகர்வு அதிகரித்துள்ளது.

அதேவேளையில், சூளகிரியில் நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் இருந்து கொண்டு வந்து குளிர்பான கடைகளில் விற்பனைக்காக குவித்துள்ளனர். வெயில் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. விலையை பொருட்படுத்தாமல் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு நுங்கினை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல், பதநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது. லிட்டர் ₹100 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சூளகிரியில் நுங்கு விற்பனைக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Nungu ,Chulagiri ,Dinakaran ,
× RELATED தேனியில் நுங்கு விற்பனை ஜோரு