- நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- வரமதி
- புது தில்லி
- அதிமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆனந்த வெங்கடேஷ்
- பி.வலர்மதி
- சமூக நலத்துறை அமைச்சர்
- தின மலர்
புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இந்த நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் வளர்மதி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்த போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து அப்போது விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வளர்மதி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு ஏன் வந்தீர்கள்?. இதுபோன்ற வழக்குகளை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள், பின்னர் அந்த உத்தரவில் ஏதேனும் தேவை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு வரலாமே என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது நேரடியாக இங்கு வந்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.