×

ராஜிவ் கொலையில் ஆயுள் சிறை பெற்று விடுதலை; சாந்தன் இலங்கை செல்ல தற்காலிக பயண ஆவணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து கடந்த 2022 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் உள்ளனர். இந்நிலையில், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிக்க தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். பின்னர் நீதிபதிகள், ,இந்த ஆவணங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 29ம் தேதிக்குள் ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post ராஜிவ் கொலையில் ஆயுள் சிறை பெற்று விடுதலை; சாந்தன் இலங்கை செல்ல தற்காலிக பயண ஆவணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Rajiv ,Chandan ,Sri Lanka ,iCourt ,Chennai ,Supreme Court ,Nalini ,Murugan ,Rajiv Gandhi ,Shanthan ,Trichy ,Dinakaran ,
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...