×

வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: கணவன் கைது

ஊத்துக்கோட்டை: ஆரணியில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் வசிப்பவர் ஜெகன் (34). இவர் அதே பகுதியில் சொந்தமாக அடகுக்கடை வைத்துள்ளார். இவருக்கு, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அனிதா (29) என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஜெகன் தனது தொழிலை மேம்படுத்த முடிவு செய்தார்.

இதில் கடந்த சில நாட்களாக அனிதாவிடம் தொழிலை அபிவிருத்தி செய்ய உள்ளேன், அதற்காக உன் வீட்டில் பணம் மற்றும் நகை வாங்கி வா என்று கூறி சண்டை போட்டு வந்துள்ளார். அதற்கு, அனிதா மறுப்பு தெரிவித்ததால் அவரை ஜெகன் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனிதா ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, வழக்குப்பதிவு செய்து, ஜெகனை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

The post வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Uthukkottai ,Arani ,Jagan ,Periyapalayam ,Anitha ,
× RELATED பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு...