×

இடைப்பாடி அருகே பயங்கரம் தலையில் கல்லை போட்டு பெண் கொடூர கொலை

*தகாத உறவு காரணமா? போலீஸ் விசாரணை

இடைப்பாடி : இடைப்பாடி அருகே, தனியாக வசித்து வந்த பெண், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள இருப்பாளி ஊராட்சி குறுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பெருமாயி(55). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மாணிக்கம் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அவருக்கு திருமணமாகி விட்டது. இதனால் பெருமாயி மட்டும், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையிலான போலீசார், பெருமாயி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சங்ககிரி டிஎஸ்பி ராஜா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். சேலத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய், சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொத்து பிரச்னையால் இந்த கொலை நடந்ததா? அல்லது தகாத உறவில் நடந்ததா? என்ற கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இடைப்பாடி அருகே பயங்கரம் தலையில் கல்லை போட்டு பெண் கொடூர கொலை appeared first on Dinakaran.

Tags : Pankaram ,Etapadi ,Ethapadi ,Salem District, Tefali Panchayat ,Eadpadi ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...