×

கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்தவர் கைது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தீ வைப்பு சம்பந்தமாக கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தீ வைப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தீ வைத்த தீனதயாளன் என்பவரை சென்னை பாரிமுனையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kabaliswarar temple ,Chennai ,Mayilapur ,Kabaliswarar Temple Gate ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...