×

ஆடு திருடிய இருவர் கைது

தூத்துக்குடி, பிப். 13:மீளவிட்டான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மனைவி ராமலட்சுமி (44). நேற்று முன்தினம் சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராமலட்சுமி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ.சண்முகம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய தாளமுத்து நகர் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த நாகூர்மீரான் (24), சரவணக்குமார் (19) ஆகிய 2 பேரை கைது செய்தார்.

The post ஆடு திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Ramalakshmi ,Melavithan South Street ,Chinnakannupuram ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...