×

நாடாளுமன்ற நிலைக்குழு புதுச்சேரி வருகை

புதுச்சேரி, பிப். 13: நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை திருப்பதி, சென்னை, சிதம்பரம், புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. எனவே இதற்காக நியமிக்கப்பட்ட பிசிஎஸ் அதிகாரிகள், கண்காணிப்பாளர், உதவியாளர்கள் ஆகியோர் செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலரின் கீழ் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கான பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக சமூகநலத்துறை இயக்குநர் ராகினி, குடிமைப்பொருள் வழங்கல்துறை சத்தியமூர்த்தி, தகவல் தொழில் நுட்பத்துறை இயக்குநர் சிவராஜ்மீனா, சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன், சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், நித்துறை சார்பு செயலர் சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், உழவர்கரை நகாட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், கலைப்பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோ உள்ளிட்ட 25 பிசிஎஸ் அதிகாரிகளும், 25 கண்காணிப்பாளர்களும், 25 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற நிலைக்குழு புதுச்சேரி வருகை appeared first on Dinakaran.

Tags : Parliamentary Standing Committee ,Puducherry ,Tirupati ,Chennai ,Chidambaram ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!