×

கொச்சியில் நள்ளிரவில் மதுபாரில் துப்பாக்கி சூடு: 2 ஊழியர்கள் படுகாயம்

திருவனந்தபுரம்: கொச்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மது பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். பார் மேனேஜர் தாக்கப்பட்டார். கொச்சி கத்திரிக்கடவு பகுதியில் ஒரு மது பார் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல இங்கு ஏராளமானோர் மது அருந்துவதற்காக வந்திருந்தனர். நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த 3 பேர் மது கேட்டுள்ளனர். ஆனால் நேரமாகி விட்டதால் மது தர முடியாது என்று பார் மேனேஜர் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் மேனேஜரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மேனேஜரை சரமாரியாக தாக்கினர்.அதைப் பார்த்த ஊழியர்களான சிஜின் ஜான்சன் மற்றும் அகில் ஆகியோர் அதைத் தடுக்க முயன்றனர்.

அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. துப்பாக்கிச் சூட்டில் சிஜின் ஜான்சனும், அகிலும் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் எர்ணாகுளம் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் துப்பாக்கி சூடு நடத்தியது கொச்சி பகுதியைச் சேர்ந்த சமீர், விஜய் மற்றும் தில்ஷன் என தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் நேற்று மாலை மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மதுபாரில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கொச்சியில் நள்ளிரவில் மதுபாரில் துப்பாக்கி சூடு: 2 ஊழியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Madhubar ,Kochi ,Thiruvananthapuram ,Kathrikkadau ,Dinakaran ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...