×

முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக டாஸ்மாக் மது விற்ற 2 பேர் கைது

முத்துப்பேட்டை,பிப்.13: முத்துப்பேட்டை அருகே சட்ட விரோதமாக டாஸ்மாக் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துப்பேட்டை பகுதியில் அரசு மதுபானங்களை சிலர் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் தில்லைவிளாகம் மேலக்கரை பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வைகுண்டம் மகன் முத்து(40), வீரன்வயல் கிராமத்தில் பழனிச்சாமி மகன் தேவதாஸ்(68) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான மதுபானங்கள் பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக டாஸ்மாக் மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Muthuppet ,Muthupet ,Dinakaran ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்