×

மதுஅருந்தி உல்லாசமாக இருந்தபோது காதலனுடன் போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி

ஊட்டி: மதுஅருந்தி உல்லாசமாக இருந்தபோது காதலனுடன் போதை காளான் சாப்பிட்டு கல்லூரி மாணவி பலியானார். ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பள்ளி நண்பர்களான 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

கடந்த 10ம் தேதி ஆகாஷ் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் போதைக்காக போதை காளானை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி திடீரென இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் ஆகாஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கடந்த 10ம் தேதி பாம்பே கேசில் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு இருவரும் ஆகாஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இருவரும் மது அருந்தி விட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வாலிபர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் சாப்பிட்டுள்ளனர். போதை தலைக்கேறி இருவரும் படுத்துள்ளனர். இதில், அந்த பெண் மூச்சுத்திணறி இறந்துள்ளார். நாங்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். அங்கு சோதனையிட்டதில் மதுபாட்டில்கள் மற்றும் போதை காளான் இருந்தது தெரிய வந்தது. எனவே வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

The post மதுஅருந்தி உல்லாசமாக இருந்தபோது காதலனுடன் போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Akash ,Bombay Castle ,Ooty Pinker ,Bali ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...