×

ஆசிரியை கொலை ஆசிரியர் சஸ்பெண்ட் மனைவியும் பணியிடை நீக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை தீபா(43). மாற்றுத்திறனாளி. அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன்(44). இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. கடந்த நவம்பர் 15ம்தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தீபாவும், வெங்கடேசனும் மாலை வீடு திரும்பாமல் திடீரென மாயமாகினர். இதுகுறித்து பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், சென்னை மெரினா கடற்கரையில் சுற்றிதிரிந்ததாக ஆசிரியர் வெங்கடேசன் தனிப்படை போலீசார் கடந்த 8ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஆசிரியையை கொன்று எரித்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அவரது மனைவியான சத்திரமனை அரசுமேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் காயத்ரி (38) ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆசிரியை கொலை ஆசிரியர் சஸ்பெண்ட் மனைவியும் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District V. Kalathur Government Higher Secondary School ,Deepa ,Venkatesan ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி