×

சிங்கப்பெருமாள்கோவில் அருகே விபத்து; அரசு பேருந்து மோதி நொறுங்கிய கார்: தம்பதி, குழந்தை காயம்

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் தம்பதி, குழந்தை என 3 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிங்கப்பெருமாள்கோவில் அருகே சென்றபோது, முன்னாள் சென்றுகொண்டிருந்த கார் மீது பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கி தடுப்புச் சுவர் மீது ஏறி நின்றது. காரில் பயணம் செய்து வந்த கணவன், மனைவி, ஒரு குழந்தை என 3 பேரும் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் ஆகியோர் விபத்தில் காயமடைந்த 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப்பேருந்து அதி வேகமாக சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

The post சிங்கப்பெருமாள்கோவில் அருகே விபத்து; அரசு பேருந்து மோதி நொறுங்கிய கார்: தம்பதி, குழந்தை காயம் appeared first on Dinakaran.

Tags : Singaperumal Temple ,Chengalpattu ,Chennai ,Trichy ,Singaperumal Temple… ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப...