சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: கவர்னர் சொல்வது மரபா என்று கேட்கிறீர்கள், இது குறித்து அரசிடமும், கவர்னரிடமும் தான் கேட்க வேண்டும். அப்போது தான் விடிவுகாலம் பிறக்கும். மரபை மாற்றுகிறார்களா, கடைபிடிக்கிறார்களா என்பது அவர்களுக்கு தான் தெரியும்.
அதேநேரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அருகருகே இருக்க வேண்டும். இது மரபு தானே, இதை பல முறை கோடிட்டு காட்டியும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் சபாநாயகரிடம் கண்டிப்பாக முறையிடுவோம். இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நல்ல தீர்வை காண்பார் என எதிர்பார்க்கிறோம்.
The post எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை சபாநாயகர் நல்ல தீர்வு காண்பார் என எதிர்பார்க்கிறோம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.