×

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்து வந்தார். ஆனால் அவருக்கு எந்த இலக்காவும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி இன்று ராஜினாமா செய்தார். புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பியதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Sentil Balaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...