×

மாநகராட்சி கமிஷனர் தகவல் திருச்சி மாவட்டத்தில் பிப்.25ம் தேதி புனித பராஅத் இரவு அரசு மாவட்ட காஜி அறிவிப்பு

 

திருச்சி, பிப்.12: திருச்சி மாவட்டத்தில் பிப்.25ம் தேதி புனித பராஅத்இரவு நடைபெறும் என்று மாவட்ட அரசு காஜி அறிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும் திருச்சி மாவட்ட அரசு காஜி அல்ஹாஜ் மௌலவி முஃப்தி ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) மாலை தமிழகத்தில் பல பகுதிகளிலும் திருச்சி மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும், மற்ற மாவட்டங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் ஷஃபான் மாத முதல் பிறை தென்பட்டதால் இன்று (பிப்.12) ஷஃபான் மாத முதல் பிறை ஆரம்பம் என்றும், மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்.25 மாலை ஷஃபே பராஅத் இரவு எனவும் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் அனைவரும் சுன்னதான வணக்கங்களும் அதிகமாக அமல் செய்து உணவு அபிவிருத்திக்காகவும், நிம்மதியுடன் வாழவும், நபி காட்டிய அனைத்து வழியிலும் பின்பற்றி, நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனிடம் அல்லாஹூம்ம பாரிக்லனா பி(f) ரஜப் வ ஷாபான் வ பல்லிகனா ரமலான் பிரார்த்தனை செய்யக் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மாநகராட்சி கமிஷனர் தகவல் திருச்சி மாவட்டத்தில் பிப்.25ம் தேதி புனித பராஅத் இரவு அரசு மாவட்ட காஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner Information Trichy District Government District ,Gazi ,Tiruchi ,District Government Gazi ,Holy Baraat night ,Trichy district ,Trichy District Hilal Committee ,Trichy District Government ,Qazi Alhaj Maulavi ,Mufti Jalil Sultan Alim ,Municipal Commissioner Information Trichy District ,Holy ,Baraat Night ,Government District ,Qazi ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...