×

வழுத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் சிறுபாலம் திறப்பு

 

கும்பகோணம், பிப்.12: கும்பகோணம் அருகே வழுத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறு பாலத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, வழுத்தூர் ஊராட்சி, பூக்கொல்லையில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தை எம்எல்ஏ ஜவாஹிருல்லா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் நாசர், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமகிருஷ்ணன் துணைத்தலைவர் முகமது சாலிஹ், அகில இந்திய காங்கிரஸ் பாபநாசம் வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பாதுஷா, ரிஃபாய், ஒன்றிய துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, மணிமாறன், திமுக நிர்வாகிகள் அறிவழகன் உட்பட ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

The post வழுத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் சிறுபாலம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaghtur panchayat ,Kumbakonam ,MLA ,Vachthur panchayat ,Thanjavur district ,Papanasam taluk ,Pookollai ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...