×

மயிலாடுதுறை மாவட்டத்தில் மனைப்பிரிவு, மனைகள் வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

 

மயிலாடுதுறை,பிப்.12: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 29ம்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 29ம்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து 4.9.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ளாதவர்கள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் மனைப்பிரிவு, மனைகள் வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Collector ,Mahabharathi ,
× RELATED மயிலாடுதுறையில் 226 பள்ளி வாகனங்கள் தணிக்கை: கலெக்டர் தலைமையில் நடந்தது