×

வல்லநாடு கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடை சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

 

செய்துங்கநல்லூர், பிப். 12: வல்லநாடு கிராமத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். வல்லநாடு கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவ- மாணவிகள் கல்லூரி முன்பாக புதிதாக பயணியர் நிழற்குடை கட்டித்தருமாறு ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர், இதற்காக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

மேலும் இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். இதற்கு நன்றி தெரிவித்த மாணவ- மாணவிகள், இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சண்முகையா எம்எல்ஏ உறுதியளித்தார். நிகழ்ச்சியில் கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கருங்குளம் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், ஊர் மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

The post வல்லநாடு கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடை சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Nizhalkudai Shanmugaiah ,Vallanadu ,Karadanganallur ,Shanmugaiah ,Vallanadu village ,Sanmukhaiya ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...