- வாஜ்பாய்
- திருச்சி
- காங்கிரஸ்
- திருநாவுக்கரசு
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- குஜராத்
புதுக்கோட்டையில் திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் தருகிற தமிழ்நாட்டுக்கு குறைவாகவும், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிகமாகவும் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்சி வித்தியாசம் இன்றி அமைச்சர்களை எம்பிக்கள் சந்தித்து பேச முடியும். தேவையான திட்டங்களை கொண்டு வரமுடியும்.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கூட அப்படியான சூழல் இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. பாரத ரத்னா விருது பலருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரம் தான் விமர்சனத்துக்குள்ளாகிறது. தேர்தல் வரப்போகும் காலத்தில் தேர்தல் நோக்கம் இருக்கிறது என்றுதான் விமர்சனம் செய்கிறார்கள்.
The post வாஜ்பாய், காங். ஆட்சி வேற…மோடி ஆட்சி வேற…: திருநாவுக்கரசர் சர்டிபிகேட் appeared first on Dinakaran.